2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’’கே.பி.எல்’’ கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம்

Mayu   / 2023 டிசெம்பர் 05 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்பிட்டியில் வருடாந்தம் பிரமாண்டமாக நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான கற்பிட்டி பிரீமியர் லீக் (கே.பி.எல்) கிரிக்கெட் சுற்றுப் போட்டி எதிர்வரும் 2024 ஜனவரி மாதம் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இப் போட்டிக்கு கற்பிட்டியில் உள்ள சகல கிரிக்கெட் கழகங்களிலும் ஆறு அணிகள் ஆறு முகாமையாளர்களால்  உறுவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படும்.

அதன்படி எம்.என்.எம் முஆதின் முகாமைத்துவத்தின் கீழ் "பூம்ஸ்" அணியும், எம்.ஐ.எம் இஹ்லாஸின் முகாமைத்துவத்தின் கீழ் "கங்காறூஸ்" அணியும், என்.எம் மஹீனின் முகாமைத்துவத்தின் கீழ் "மஹாசின்ஸ்" அணியும், எம்.எப்.எம் றியாஸ் மற்றும் ஸம்ஸமின் முகாமைத்துவத்தின் கீழ் "றைசிங் ஸ்டார்" அணியும், எம்.எம் மில்ஹானின் முகாமைத்துவத்தின் கீழ் "எம்.டி.எம்" அணியும், கனிஷ்டனின் முகாமைத்துவத்தீன் கீழ் "லியோ" அணியும் என ஆறு அணிகள் போட்டியிடவுள்ளன.

இவ் அணிகளுக்கான  வீரர்களை ஏலத்தில் எடுக்கும் நிகழ்வு 08 ஆம் திகதி கற்பிட்டியில் இடம்பெற உள்ளது. இவ் ஏலத்தில் கற்பிட்டியில் உள்ள சகல கிரிக்கெட் கழகங்களிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட திறமையான 102 கிரிக்கெட் வீரர்கள் ஏலமிடப்படுவதுடன் ஒவ்வொரு அணிக்கும் 13 வீரர்கள் முகாமையாளர்களால் ஏலத்தின் மூலம் தேர்தெடுக்கப்படுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எம்.யூ.எம்.சனூன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .