2026 மார்ச் 19, வியாழக்கிழமை

சம்பியனாகிய விஜயசாந்தன் தலைமையிலான அணி

Shanmugan Murugavel   / 2026 மார்ச் 18 , பி.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வி.ரி. சகாதேவராஜா

காரைதீவு விபுலானந்த மைதானத்தில் திங்கட்கிழமை (16) நடைபெற்ற காரைதீவு பிறீமியர் லீக் கிண்ண மென்பந்தாட்ட கிரிக்கெட் தொடரில் விஜயசாந்தன் தலைமையிலான அணி சம்பியனாகியது.

வழமை போல் காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் நான்கு அணிகள் சிநேகபூர்வமாக இத்தொடரில் பங்கேற்றன.

இறுதியாக நடைபெற்ற பலரையும் கவர்ந்த கயிறிழுத்தல் போட்டியில் "நல்லமா" அணி வெற்றிவாகை சூடியது.

காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் 43ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இத்தொடர் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X