2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சம்பியனானது கிளிநொச்சி மகா வித்தியாலயம்

Editorial   / 2019 ஜூலை 04 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கே. கண்ணன் 

வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான மேசைப்பந்தாட்டத் தொடரில் கிளிநொச்சி மகா வித்தியாலயம் சம்பியனாகியது. 

யாழ் மத்திய கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையை எதிர்கொண்டே கிளிநொச்சி மகா வித்தியாலயம் சம்பியனாகியிருந்தது.

மூன்று தனிநபர்,இரண்டு இரட்டையர் போட்டிகள் கொண்ட குறித்த இறுதிப் போட்டியில் மூன்று தனிநபர் போட்டிகளையும் கிளிநொச்சி மகா வித்தியாலயம் வென்ற நிலையில் சம்பியனானது.

இதேவேளை, இத்தொடரில் மூன்றாமிடத்தை சுண்டுக்குழி மகளிர் கல்லூரி பெற்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X