R.Tharaniya / 2025 நவம்பர் 02 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னையில், பெண்களுக்கான 'டபிள்யு.டி.ஏ., 250' அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஆஸ்திரேலியாவின் அரினா ரோடியோனோவா, சீனதைபேயின் ஜோனா கார்லேண்டு மோதினர். முதல் செட்டை 6-2 என கைப்பற்றிய ஜோனா, 'டை பிரேக்கர்' வரை சென்ற 2வது செட்டை 7-6 என வசப்படுத்தினார்.
ஒரு மணி நேரம், 56 நிமிடம் நடந்த போட்டியில் ஜோனா, 6-2, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் இந்தோனேஷியாவின் ஜானிஸ் டிஜென், சுலோவாகியாவின் மியா போஹன்கோவா மோதினர். அபாரமாக ஆடிய ஜானிஸ் டிஜென் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
8 minute ago
2 hours ago
02 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago
02 Mar 2026