2024 மே 20, திங்கட்கிழமை

மன்னார் பிறிமியர் லீக் ஆரம்பமானது

Freelancer   / 2023 ஜூலை 06 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்ட கால்பந்தாட்ட லீக்கின் மன்னார் பிறீமியர் லீக்கின் இரண்டாவது பருவகாலமானது அண்மையில் ஆரம்பமானது.

குறித்த தொடரில் 12 கால்பந்தாட்டக் கழகங்களைச் சேர்ந்த 300 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஆரம்ப நிகழ்வாக மன்னார் நகரத்தில் இருந்து கழகங்களைச் சேர்ந்த வீரர்கள், உரிமையாளர்கள், விருந்தினர்கள் ஊர்வலமாக சென்று மன்னார் பொது விளையாட்டு மைதானத்துக்கு அருகாமையில் வைக்கப்பட்டுள்ள தேசிய சாதனையாளர் அமரர் பியூஸ்லஸின் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி அங்கிருந்து வாகனம் பவனி ஊடாக ஜோசப்வாஸ் நகரில் அமைந்துள்ள முன்னாள் ஆயர் ராஜப்பு யோசேப்பு  ஆண்டகை விளையாட்டு மைதானத்தை சென்றடைந்தனர். பின்னர் உரிமையாளர்கள் மற்றும் வீரர்கள் அறிமுகம் இடம் பெற்றது.

பின்னர் மின்னொளியில் நடைபெற்ற முதலாவது போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் லக்கி கால்பந்தாட்டக் கழகத்தை மாட்டிஸ் கால்பந்தாட்டக் கழகம் வென்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X