Freelancer / 2023 செப்டெம்பர் 03 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்ஹர் இப்றாஹிம்
தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தால் நடாத்தப்படும் அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் கழங்களுக்கிடையிலான எல்லே போட்டியில் பாலமுனை இளைஞர் கழகம் அணி வெற்றி பெற்று மாவட்ட மட்ட போட்டிக்குத் தெரிவாகிள்ளது. 
ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற அல் அஸ்லம் இளைஞர் கழகத்துடனான போட்டியில் வென்றே மாவட்ட மட்ட போட்டிக்கு பாலமுனை இளைஞர் கழகம் தெரிவாகியுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாலமுனை இளைஞர் கழகம் 20 பந்துகளுக்கு 10 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்காக 11 ஓட்டங்களை நிர்ணயம் செய்தது.
பதிலளித்தாடிய பாலமுனை அல் அஸ்லம் இளைஞர் கழக அணி 7 ஓட்டங்களை பெற்றுக் கொண்டமையால் பாலமுனை இளைஞர் கழகம் வெற்றி பெற்று மாவட்ட மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago