Freelancer / 2023 ஒக்டோபர் 19 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொனராகலை - தொம்பகஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லியங்கொல்ல பிரதேசத்தில் வசிக்கும் 07 ஆம் தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியரை பொலிஸார் புதன்கிழமை (18) ஆம் திகதி கைது செய்துள்ளனர்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவி கலபெத்த பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றில் உள்ள தாம் பாடசாலையில் கல்வி பயின்று வந்துள்ளார். அங்கு கணிதம் கற்பிக்கும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரின் வகுப்பிலும் கலந்து கொண்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (08)ஆ ம் திகதி ஆசிரியர், மாணவியின் தாயாரை அழைத்து, கணித பாடத்திற்கு இரண்டு வினாத்தாள்கள் வழங்க வேண்டியுள்ளதால், மாணவியை தன் வீட்டு வகுப்புக்கு அனுப்புமாறு தெரிவித்தார்.
அதன்படி, மகளை தாயார் வகுப்புக்கு அனுப்பியுள்ளார்.
தற்போது யாரும் வசிக்காத தனது சகோதரியின் வீட்டிற்கு மாணவியை அழைத்துச் சென்ற ஆசிரியர் குறித்த மாணவிக்கு சாப்பிடுவதற்கு உணவுகளை கொடுத்துள்ள நிலையில் மாணவி மயக்கமடைந்ததை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
சுமணசிறி குணதிலக
19 minute ago
35 minute ago
39 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
35 minute ago
39 minute ago
43 minute ago