2026 மார்ச் 16, திங்கட்கிழமை

உயிரை மாய்த்துக் கொண்ட இளம் யுவதி

Janu   / 2024 ஒக்டோபர் 16 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்பிட்டி முஹமதிய்யா புரத்தை சேர்ந்த பாத்திமா ஹசீனா என்ற  18 வயதுடைய இளம் யுவதி   தன் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் புதன்கிழமை (16) அன்று  சடலமாக  மீட்கப்பட்டுள்ளார்.

புதன்கிழமை (16) காலை வீட்டிற்கு வெளியில் வந்து பார்த்தபோது தனது மகள் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் காணப்பட்டதாகவும் உடனடியாக உறவினர்களின் உதவியுடன் கற்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததாகவும் உயிரிழந்த யுவதியின் தந்தை தெரிவித்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த கற்பிட்டி பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன் மேலதிக விசாரணைக்காக சடலம் புத்தளம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

 எம்.யூ.எம்.சனூன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X