2025 ஒக்டோபர் 20, திங்கட்கிழமை

ஐஸூடன் ஒருவர் கைது

Janu   / 2025 ஒக்டோபர் 12 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் , ஆராச்சிக்கட்டுவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் சனிக்கிழமை (11) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆராச்சிக்கட்டுவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், ஆராச்சிக்கட்டுவ - பண்டாஹேன பகுதியில் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் .

சந்தேக நபரிடமிருந்து 396 கிராம் ஐஸ் போதைப் பொருள்  மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 31 வயதுடைய கொழும்பு - மருதானை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ரஸீன் ரஸ்மின்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .