2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’கம்பஹா வீதிகளை விரிவுபடுத்த திட்டம்’

Niroshini   / 2021 செப்டெம்பர் 09 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹ நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படும்  போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக வீதிகளை விரிவுபடுத்தும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என, நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன்  பெர்ணான்டோ தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், சுபீட்சத்தின் நோக்கத்துக்கு அமைய, நாடு  முழுவதையும் உள்ளடக்கி, முக்கிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டம் தற்போது  செயற்படுத்தப்பட்டு வருவதாதகத் தெரிவித்தார்.

இது நாட்டின் அனைத்து மாகாணங்களையும் மாவட்டங்களையும் உள்ளடக்கியது எனத் தெரிவித்த அவர், இந்த வீதி அபிவிருத்தி   திட்டத்துக்கு இணையாக, மேல்  மாகாணத்தில் தேசிய  வீதிகளை  அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ், கம்பஹ நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படும்  போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு அடையாளம் காணப்பட்ட அனைத்து வீதிகளையும் விரிவுபடுத்தவும், துரிதமாக அபிவிருத்தி செய்யவும்  திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன எனவும் கூறினார்.

இதற்கான அறிவுறுத்தலையும் நெடுஞ்சாலை அமைச்சின்  செயலாளருக்கு வழங்கியுள்ளதாகவும், அமைச்சர் கூறினார்.
 
'அதன்படி, கம்பஹா - மிரிஸ்வத்த வீதி நான்கு   வழிப் பாதைகளாகவும், கம்பஹா - யக்கல வீதி நான்கு வழிப்  பாதைகளாகவும், ஏகல - கொட்டதெனியாவ வீதி விரிவாக்கப்பட்டு அபிவிருத்தி செய்தல், நிட்டம்புவ - வெயங்கொட வீதி நான்கு  வழிப் பாதைகளாக விரிவுபடுத்தல், வெயங்கொட - கல்எலிய வீதியை   விரிவுபடுத்தி   அபிவிருத்தி செய்தல் ,கலகெடிஹேன - வெயங்கொட  வீதி  விரிவாக்கம் மற்றும்  அபிவிருத்தி செய்தல், நீர்கொழும்பு - கிரிஉல்லா வீதியை  வை சந்தி  வரை நான்கு வழிப் பாதையாக  விரிவாக்குதல்  மற்றும்  அபிவிருத்தி செய்தல், நிட்டம்புவ - ஊரபொல வீதியை காபட் இட்டு அபிவிருத்தி செய்தல் ,  வரகாபொல  நகர  குறுக்கு வீதிக் கட்டமைப்பை  அபிவிருத்தி செய்தல், பஸ்யாலையில் இருந்து மீரிகம வழியாக கிரியுல்லவிற்கான வீதியை விரிவுபடுத்துதல் மற்றும் அபிவிருத்தி செய்தல், ஜா - எல மினுவாங்கொட - திவுலப்பிட்டிய வீதியை அபிவிருத்தி செய்தல், நீர்கொழும்பு - கிரியுல்ல வீதியை  அபிவிருத்தி செய்தல், ஊரபொல - ஹங்வெல்ல வீதி அபிவிருத்தி மற்றும் பஸ்யால சந்தியை விரிவுபடுத்துதல் என்பன இதன் கீழ் அபிவிருத்தி செய்யப்படும்' என்றார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்டத்தின்  கடவத்தையிலிருந்து மீரிகம வரையான பகுதி  கம்பஹ நகரத்தின் ஊடாக  செல்வதால், அதன்  நிர்மாணப் பணிகள்   கம்பஹ நகரில்  போக்குவரத்து நெரிசலுக்கு தாக்கம் ஏற்படுத்தலாம் என்று தெரிவித்த அமைச்சர், கம்பஹ நகரத்தை மையமாகக் கொண்டு முன்னெடுக்கும் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .