Kogilavani / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 05:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

காயத்திரி விக்கினேஸ்வரன்
இணுவையூர் கவிஞர் வ.சு.பரமநாதனின் 'காலம் தந்த வலிகள்' கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடும் மூத்தோர் கௌரவிப்பும், ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு இணுவில் மஞ்சத்தடியில் அமைந்துள்ள அருணகிரி சுப்பிரமணிய மண்டபத்தில் நடைபெற்றது.
பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் வ.மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னுரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கம், வாழ்த்துரையை கலாநிதி ஆறுதிருமுருகன், நூல் வெளியீட்டுரையை ஊடகவியலாளர் ந.வித்தியாதரன், நூல் நயப்புரையை பேராசிரியர் சிவலிங்கராஜா, நூலாசிரியர் கவிஞர் வ.சு.பரமநாதன் ஆகியோர் நிகழ்த்தினர்.
மூத்தோர் கௌரவிப்பு விழாவில் இணுவை மண்ணுக்கு பல வழிகளிலும் பெருமை சேர்த்த மண்ணின் மைந்தர்களான பேராசிரியர் சபா ஜெயராஜா, பேராசிரியர் தேவராஜா, எழுத்தாளர் கே.எஸ்.ஆனந்தன், இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன், எழுத்தாளர் கா.வைத்தீஸ்வரன், மு.சிவலிங்கம், தாயக ஒலி ஆசிரியர் தம்புசிவா, இசைக்கலைஞர்கள் சுந்தரமூர்த்தி, புண்ணியமூர்த்தி, சமூக சேவையாளர்களான சே.சோதிப்பெருமாள், பெ.கனகசபாபதி, மற்றும் டாக்டர் க.பாலசுப்பிரமணியம் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.






1 hours ago
1 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
5 hours ago