2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

16 ஆமைகளுடன் ஒருவர் கைது

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

சட்டவிரோதமாக ஆமை இறைச்சி விற்பனையில் ஈடுபட்ட அக்கரைப்பற்று கண்ணகிபுரத்தைச் சேர்ந்த  ஒருவரை நேற்றைய தினம் (10) பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து 16 பாலாமைகளையும் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த நபர் அக்கரைப்பற்று வாவியில் இருந்து ஆமைகளைப் பிடித்து தனது மோட்டார் சைக்கிளில் கண்ணகிபுரத்திற்கு எடுத்துச் சென்ற போதே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையின் போது குறித்த நபர் அக்கரைப்பற்று வாவியில் இருந்து ஆமைகளைப் பிடித்து இறைச்சியாக்கி  அதனை அம்பாறை நகரிலுள்ள உணவகங்களுக்கு நீண்ட காலமாக விற்பனை செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .