2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

அரச ஊழியர் போன்று நடித்து பண மோசடி

Janu   / 2024 பெப்ரவரி 27 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தளாய் பிரதேச செயலகத்திற்கு  உட்பட்ட பல  பகுதிகளில் அரச உத்தியோகத்தர்  என்று தன்னை  அறிமுகப்படுத்தி   வயோதிபர்களிடம் அஸ்வெசும  திட்டத்தில் தங்களின் பெயர் வந்துள்ளது என்று கூறி பணம்  மோசடியில் ஈடுபட்ட ஒருவர்  அம்பலமாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர் .

குறித்த நபர் கந்தளாய் ஆரியவங்ச மாவத்தை வாத்தியகம வட்டுக்கச்சி மற்றும்   லைட்வீதி போன்ற பகுதிகளில் தன் கைவரிசையை காட்டியுள்ளதாக அப்பகுதி  மக்கள் தெரிவித்துள்ளனர் .

தங்களுக்கு அஸ்வெசும திட்டத்தில் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறி இப்பகுதிகளில் நான்காயிரம் மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் பெற்றுள்ளதாகவும் இவ் விடயம் குறித்து கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது .

சந்தேக நபர் நடமாடியமை தொடர்பாக அப்பகுதிகளில் பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளதுடன்  இது  தொடர்பிலான  மேலதிக  விசாரணைகளை கந்தளாய்  பொலிஸார்  மேற்கொண்டுவருகின்றனர்.  

எப்.முபாரக்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X