2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

Janu   / 2023 ஜூலை 25 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 2கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவரை திங்கட்கிழமை  (24) பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை கூம்பூகார் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவர் சேருநுவர பகுதியிலிருந்து திருகோணமலைக்கு இரண்டு கிராம் ஐஸ் போதைப் பொருளை கொண்டு செல்லுவதற்கு வைத்திருந்த நிலையில்  சேருநுவர போதைப் பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஐஸ் போதைப்பொருளுடன் குறிப்பிட்ட நபரை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறிப்பிட்ட சந்தேக  நபரை  பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது  அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு  நீதிவான் உத்தரவிட்டுள்ளனர் . 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .