Freelancer / 2023 ஜனவரி 03 , மு.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி சகாதேவராஜா
காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டை பூர்த்திசெய்யும் வகையில், காரைதீவில் உள்ள ஒரு குடும்பம் ஒரு தொகுதி மருந்து பொருட்களை வழங்கியுள்ளது.
காரைதீவு மார்க்கண்டு (முதலாளி) சமூகஅறக்கட்டளை மூலம் ஒரு தொகுதி மருந்துப்பொருட்கள், புதுவருட தினமான நேற்று முன்தினம் குடும்ப உறுப்பினர்களால், ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான மருந்துப் பொருட்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டது.
சமுக அறக்கட்டளை பிரதிநிதிகளான திருமதி மார்க்கண்டு, மகன் வித்தியானந்தன் உள்ளிட்டவர்கள், வைத்தியசாலை பொறுப்பதிகாரி டொக்டர் நடராஜா அருந்திரனிடம் வழங்கி வைத்தனர்.
மருந்து தட்டுப்பாடு தொடர்பாக, டொக்டர் நடராஜா அருந்திரன், பகிரங்கமாக மக்களிடம் உதவும்படி கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
25 Apr 2026