Janu / 2024 நவம்பர் 19 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது கசிப்பு போதைப்பொருளுடன் 30 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர் .
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி ,தாழங்குடா, புதுக்குடியிருப்பு, நாவற்குடா, கல்லடி,கிரான்குளம் உட்பட பல இடங்களில் குறித்த திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது கசிப்பு விற்பனை செய்யும் இடங்கள், கசிப்பு உற்பத்தி நிலையங்கள் என்பன சுற்றிவளைக்கப்பட்டது. மறைத்து வைக்கப்பட்ட மற்றும், விற்பனை செய்யப்பட்ட நிலையில் சுமார் 150 லீட்டர் ர கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் 30 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பெருமளவிலான உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் , கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர் .
ரீ.எல்.ஜவ்பர்கான்

2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago