2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கல்முனை மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

Ilango Bharathy   / 2021 நவம்பர் 19 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

மழை காரணமாக நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில்,  விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று   நாளை(20)   நற்பிட்டிமுனை பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அப்பகுதி மக்களை தமது வீட்டையும்  அதனைச் சூழவுள்ள இடங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு  கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி   கேட்டுள்ளார்.

குறித்த வேலைத்திட்டமானது  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணனின்  வழிகாட்டலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ. ஆர் . எம் . அஸ்மி  தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X