2025 ஜூன் 25, புதன்கிழமை

டெங்கு வலயம் பிரகடனம்

Freelancer   / 2022 டிசெம்பர் 15 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி பிரிவு டெங்கு நோய் பரவக் கூடிய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக, கல்முனைப் பிராந்திய தொற்றா நோய் பிரிவின் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.சி.எம். பஸால் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் முன்னெடுக்கப்படவுள்ள டெங்கொழிப்பு நடவடிக்கை தொடர்பான கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை (13) சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தில் சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் ஏ.எம். இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.  

டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு புகை விசுறும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, பாடசாலைகளில் விசேட டெங்கொழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றார். 

ஒருங்கினைந்த சுகாதார மேம்பாட்டு அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் ஊடாக டெங்கொழிப்பு நடவடிக்கையினை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கு சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் டெங்கொழிப்பு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .