2025 ஜூன் 18, புதன்கிழமை

திருமலையில் 17 பேருக்கு கொரோனா

Editorial   / 2021 ஏப்ரல் 24 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கீத்

திருகோணமலை மாவட்டத்தில் இன்றைக்கு வரைக்கும் கொவிட் 19 தொற்றாளர்கள் 17 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந்த் தெரிவித்தார்.

திருகோணமலையில் உள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (24)இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

கொவிட்-19 நிலைமைகள் தொடர்பில் மேலும் விளக்கமளித்த அவர்,  

இதில், திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள 05 தாதியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதிலொருவர், ஏற்கெனவே கொவிட் தடுப்பூசி ஏற்றியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலை நகர் பகுதியில் நேற்றைய தினம் இணங்காணப்பட்டதில் மூன்று பாடசாலையில் இருந்து மாணவன் மற்றும் ஆசிரியர் இருவர்களூக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர், தனியார் கல்வி நிலையங்களை மூடுவதற்கான நடவடிக்கைகளையும் ஆலோசித்து வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .