2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

மீன் பிடித்தவரை இழுத்துச் சென்ற முதலை

Ilango Bharathy   / 2022 ஜனவரி 02 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாமம் தாலிபோட்டாற்றில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரை நேற்றைய தினம்  (01) முதலையொன்று  கடுமையாகத் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாகப்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மண்டானை திருக்கோவில் 4 பிரிவைச் சேர்ந்த 55 வயதான  இராசநாயகம் விநாயகமூர்தி என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார்  மேற்கொண்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X