2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

மீன் பிடித்தவரை இழுத்துச் சென்ற முதலை

Ilango Bharathy   / 2022 ஜனவரி 02 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாமம் தாலிபோட்டாற்றில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரை நேற்றைய தினம்  (01) முதலையொன்று  கடுமையாகத் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாகப்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மண்டானை திருக்கோவில் 4 பிரிவைச் சேர்ந்த 55 வயதான  இராசநாயகம் விநாயகமூர்தி என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார்  மேற்கொண்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .