2025 ஜூன் 25, புதன்கிழமை

வதிவிட செயலமர்வு

Freelancer   / 2022 டிசெம்பர் 13 , மு.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜி- சேர்ப் (G-CERF) நிறுவனத்தின் அனுசரணையில் ஹெல்விடாஸ் (HELVETAS) நிதியுதவியுடன் சமாதானமும் சமூக பணி(PCA)  நிறுவனத்தால் அம்பாறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வை-சென்ச் (y-change) திட்டத்தின் மூலம் 20 பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள இளைஞர் நல்லிணக்க குழுக்களின் இணைப்பாளர்கள் மற்றும் அம்பாறை மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான மூன்று நாள் (9/12, 10/12, 11/12) வதிவிட செயலமர்வு அம்பாறையில் நடைபெற்றது.

இதில் வளவாளராக ரி. மோசஸ் கலந்து கொண்டதுடன், PCA  நிறுவனத்தின் தேசிய  பணிப்பாளர் ரி. தயாபரன், வை-சென்ச்  திட்டத்தின் திட்ட இணைப்பாளர்  ஐ. சுதாவாசன், நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர்களான கே.டி ரோகிணி, எச்.எஸ் ஹசனி, டப்ளியூ.எம் சுரேகா, சமாதான தொண்டர் டி. சாலினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .