Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 29 , மு.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் நிலவும் உட்பூசல் முடிவுக்கு வரும் வரையில், தான் தன்னுடைய தலைமயிரை வெட்டப்போவதில்லை என்றும் அமைச்சர் துமிந்த திசாநாயக்க வளர்க்கப்போவதுமில்லை என்றும் நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
தான், தற்போது ஆதிவாசிகளின் தலைவர் என்றும் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், அதனால் தான், தனக்கு மஹியங்கனை தொகுதிக்கான அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்றும் தம்புத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,
'1994ஆம் ஆண்டில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இலங்கைக்கு வந்து, எமது கட்சியை ஒன்றிணைத்தார். அவர் தேர்தலில் போட்டியிட்ட போது, எமது கட்சி, ஒரு தொகுதியில் மாத்திரமே தோல்வியடைந்தது. அது மஹியங்கனைத் தொகுதியாகும். அந்தத் தேர்தலின் பின்னர், மஹியங்கனைத் தொகுதியை பொறுப்பேற்குமாறு, சந்திரிகா, எனக்குக் கூறினார். நானும், அதனைப் பொறுப்பேற்றுக்கொண்டேன்.
சு.க.வுக்குள் ஒற்றுமை வலுப்பெறும் வரையில், நான் எனது தலைமயிரை வளர்ப்பேன். அமைச்சர் துமிந்த திசாநாயக்கவும், அதுவரையில் தன்னுடைய தலைமயிரை வளர்க்கப்போவதில்லை. நான் தலைமயிர் வெட்ட வேண்டுமாயின், துமிந்த திசாநாயக்க, தலைமயிர் வளர்க்க வேண்டுமாயின், கட்சியை ஒற்றுமைப்படுத்துங்கள்' என அவர் மேலும் குறிப்பிட்டார்.
7 hours ago
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
16 Aug 2025
16 Aug 2025