2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

'தங்க நாக்கு' கொண்ட இருவர் கைது

Princiya Dixci   / 2017 ஜனவரி 31 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிகவும் சூட்சுமமான முறையில் நாக்குக்குக் கீழே மறைத்து வைத்து தங்க பிஸ்கட்களைக் கடந்த முயற்சித்த இருவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று  காலை, கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 1 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய 180 கிராம் நிறைகொண்ட தங்க பிஸ்கட்களை, இந்தியாவின் திருவனந்தபுரம் பகுதிக்கு, இவர்கள் கடந்த முயற்சித்துள்ளதாக, ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

குறித்த இருவரில் ஒருவர், பேசுவதற்கு மிகுந்த சிரமப்பட்டதனால், அர்களின் நடத்தையில் எழுந்த சந்தேகத்தைத் தொடர்ந்து, இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டதாக, கட்டுநாயக்க விமான நிலையப் பிரதி சுங்கப் பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .