2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘மஹிந்தவுடன் இணைய முடியாதா?’

George   / 2017 ஜனவரி 12 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.நிரோஷினி

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போது பொதுவேட்பாளர் இல்லை. அவர் சு.கவின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதித் தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிடலாம்” என, மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார்.

ஐ.தே.கவே, இந்நாட்டின் அரசியல் விரோதி என ஜனாதிபதி கூறியுள்ளார். இந்நிலையில், இவ்வாறானதொரு கட்சியுடன் இணைந்து ஆட்சி நடத்தமுடியுமானால் ஏன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயலாற்ற முடியாது. அவருக்கும் இதில் பிரச்சினை இல்லை. எமக்கும் இதில் பிரச்சினை இல்லை எனவும் தெரிவித்தார்.  

மேல் மாகாண முதலமைச்சர் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற உடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  

“ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் மாத்திரமே நாம்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயலாற்றினோம். என பிரதமரும் பகிரங்கமாகவே அறிவித்துள்ளார். இனிவரும் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்தே போட்டியிடும் என அறிவித்துள்ளார். எனவே, எதிர்வரும் தேர்தல்களில் நாம் தனித் தனியேதான் போட்டியிடுவோம்.   
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்பாளர் ஒருவர் தேவை என்ற பிரச்சினை இருந்தது.

அந்தவகையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு 2020ஆம் ஆண்டில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் இருக்கிறார். அவர்தான், மக்களின் அபிமானத்தைப் பெற்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. அவருக்கு மட்டுமே தகுதி உள்ளது” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .