Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Simrith / 2025 ஒக்டோபர் 12 , பி.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
1 வயது 8 மாதம் நிரம்பிய குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக அக்மீமனவைச் சேர்ந்த 65 வயது நபருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு குற்றச்சாட்டுகளில் சந்தேகநபர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து காலி மேல் நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியது. முதல் குற்றச்சாட்டில் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, இரண்டாவது குற்றச்சாட்டில் 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
விசாரணையின் போது, 2018 ஆம் ஆண்டில், சந்தேக நபர் பக்கத்து வீட்டில் தனது தாயுடன் இருந்த குழந்தையை எங்காவது அழைத்துச் செல்வதாகக் கூறி வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்தது தெரியவந்தது.
சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக, 500,000 ரூபா இழப்பீடு வழங்கவும், அபராதத்தை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
12 Oct 2025
12 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 Oct 2025
12 Oct 2025