2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

19ஆம் மாடியிலிருந்து கீழே விழுந்து பெண் உயிரிழப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, வெள்ளவத்தை ஹெவலோக் சிட்டி தொடர்மாடி குடியிருப்பிலிருந்து கீழே விழுந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

தொடர்மாடி குடியிருப்பின் 19ஆம் மாடியிலிருந்து 41 வயதான குறித்த பெண் கீழே வீழந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று முன்னெடுக்கப்படவுள்ளதுடன், வௌ்ளவத்தை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .