Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2023 ஜூலை 25 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்களிடமிருந்து பல நாள் மீன்பிடி படகுகளை இரண்டையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இலங்கை கடற்படையினர் மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களம் இணைந்து ஜூலை 24 ஆம் திகதி இரவு, யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் விசேட நடவடிக்கை மேற்கொண்டனர்.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படையினர் இலங்கை கடற்பரப்பில் வழமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதனடிப்படையிலேயே இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து இரண்டு மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடி படகுகள் இரண்டும் அதில் இருந்த இந்திய மீனவர்கள் ஒன்பது பேரும், காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
14 May 2025
14 May 2025
14 May 2025