2024 மே 17, வெள்ளிக்கிழமை

3 மாணவிகளுக்கு ஆர்வ கோளாறு

Mithuna   / 2024 ஜனவரி 08 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கரூர் மாவட்டம் தான்தோணிமலை பகுதியில் உள்ள அரசுப் பாடசாலையில் 8-ம் வகுப்பில் படிக்கும் மாணவிகளில் மூன்று மாணவிகள், கடந்த 4ம் திகதி வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக மாணவிகளின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.

முக்கிய பொது இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிரிவி கமெராக்களை,பொலிஸார் ஆய்வு செய்தனர்.

இதில், 3 சிறுமிகளும் காட்பாடி ரயில்வே நிலையத்தில் சுற்றித் திரிந்தது தெரியவந்தது. அதனை அடுத்து  காணாமல் போன 3 சிறுமிகளையும் பத்திரமாக மீட்டனர்.

​​அவர்களை பொலிஸார் விசாரித்த போது, கொரியாவில் பிரபல பிடிஎஸ் (BTS) இசைக்குழு மீதான ஆர்வத்தால், அவர்களது இசைக்கச்சேரியை பார்ப்பதற்காக கொரியா செல்ல முயற்ச்சியில்   ஈடுப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .