2025 ஜூலை 09, புதன்கிழமை

341 அமைப்பாளர்களும் கொழும்புக்கு அழைப்பு

Editorial   / 2018 நவம்பர் 13 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள், இன்று (13) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.  

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்‌ஷ்மன் பியதாஸவினால், அதற்கான அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.  

கட்சியின் தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ், ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெறவிருக்கும் விசேட கூட்டத்துக்கே, அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்று ரோஹன லக்‌ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.  

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர் 341 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .