2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

49 பேர் அடங்கிய தூதுக்குழுவினருடன் இந்தியத் துணை ஜனாதிபதி வந்தடைந்தார்

Editorial   / 2026 ஏப்ரல் 19 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 49 பேர் கொண்ட தூதுக்குழுவினர், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (19.04.2026) காலை 9:30 மணியளவில் இலங்கையை வந்தடைந்தனர்.

நாளை (20) வரை இலங்கையில் தங்கியிருக்கும் அவர், தனது இப்பயணத்தின் போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோரைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளார்.

மேலும், அவர் இலங்கையில் நடைபெறும் பல முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன், அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களுடனும் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.

இந்த விஜயத்தின் முக்கிய அங்கமாக, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகள் சார்ந்த பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) பரிமாறிக்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .