2026 மார்ச் 19, வியாழக்கிழமை

52,360 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

Freelancer   / 2026 மார்ச் 09 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

போர்ப் பதற்​றம் நில​வும் வளை​குடா நாடு​களில் இருந்து கடந்த வெள்​ளிக்​கிழமை இரவு வரை 280 விமானங்​களில், 52,360 இந்​தி​யர்​கள் தாயகம் திரும்​பி​யுள்​ளனர் என டி.ஜி.சி.ஏ. கூறியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்​கா, இஸ்​ரேல் தாக்​குதல் நேற்று 8-வது நாளை எட்டியது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுப்ப​தால் வளை​கு​டா​வில் போர்ப் பதற்றம் அதி​கரித்​துள்​ளது. இதனால் வளை​குடா நாடுகளில் இருந்து இந்​தி​யர்​களை மீட்க மத்​திய அரசு நடவடிக்கை மேற்​கொண்​டுள்​ளது.

இந்​நிலை​யில், மத்​திய சிவில் விமானப் போக்​கு​வரத்து இயக்​குநரகம் (டி.ஜி.சி.ஏ) நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில், 

வளை​குடா நாடு​களில் இருந்து இந்​திய மற்​றும் மத்​திய கிழக்கு விமான நிறு​வனங்​கள் மற்​றும் சிறப்பு விமானங்​கள் மூலம் வெள்​ளிக்​கிழமை இரவு வரை 52,360 பேர் தாயகம் திரும்​பி​யுள்​ளனர். இந்த விமானங்​களில் 184 விமானங்​களை இந்​திய விமான நிறு​வனங்​கள் இயக்​கின. அதைத் தொடர்ந்து 85 ஐக்​கிய அரபு அமீரக (யு.ஏ.இ.) விமானங்​களும் 11 சிறப்பு விமானங்​களும் இயக்​கப்​பட்​டுள்​ளன என்று தெரி​வித்​துள்​ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X