2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

57 கொரோனா மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளன

Editorial   / 2021 ஜூன் 14 , பி.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது,

நேற்றைய (13) மரணங்கள் தொடர்பில் இன்று (14) வெளியான அறிக்கையின் பிரகாரம் 57 பேர் மரணித்துள்ளனர்.

அதில், 25 பெண்களும், 32 ஆண்களும் அடங்குகின்றனர். 30 வயதுக்கும் கீழ், ஆணொருவர் மரணித்துள்ளார்.

30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடையில் 11 பேர் மரணித்துள்ளனர். அதில், ஐவர் பெண்களாவர்.

இதேவேளை, 60 வயதுக்கும் அதற்கு மேற்பட்ட வயதுகளைச் சேர்ந்தவர்கள் 45 பேர் மரணித்துள்ளனர். அதில், 25 பெண்களும் 32 ஆண்களும் அடங்குகின்றனர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .