Janu / 2025 ஜூலை 21 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கடற்படையினர், ஜூலை 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் புத்தளம், சேரக்குளிய, கற்பிட்டி மற்றும் கங்கேவாடிய கடலோரப் பகுதிகளில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் எழுநூற்று ஐம்பது (750) கிலோகிராம் பீடி இலைகளுடன் ஒரு (01) டிங்கி படகு கைப்பற்றப்பட்டது.
அதன்படி, 2025 ஜூலை 16 ஆம் திகதி ககேவாடிய கடலோரப் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் விரைவு நடவடிக்கை கடற்படை தலைமையகம் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் நானூற்று பன்னிரண்டு (412) கிலோகிராம் பீடி இலைகளைக் கொண்ட ஒரு டிங்கி படகு கைப்பற்றப்பட்டது, மேலும் 2025 ஜூலை 17 ஆமட் திகதி சேரக்குளிய கடலோரப் பகுதியில் விஜய நிறுவனத்தால் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ஒரு புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் முந்நூற்று முப்பத்தெட்டு (338) கிலோகிராம் பீடி இலைகளையும், கடத்தல்காரர்களால் நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் எழுநூற்று ஐம்பது (750) கிலோகிராம் பீடி இலைகளையும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் டிங்கி படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் துறை அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.



6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago