2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அதிர்ஷ்ட இலாப விவகாரம்: பேச்சு தோல்வி

Kogilavani   / 2017 ஜனவரி 17 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய லொத்தர் சபையின் தலைவி ஷியாமிளா பெரேராவுக்கும், தங்களுடைய சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையால், அதிர்ஷ்ட இலாபச்சீட்டுகளை விற்பனை செய்வதிலிருந்து முழுமையாக விலகிநிற்கவுள்ளதாக அதிர்ஷ்ட இலாபச்சீட்டு முகவர் சங்கத்தின் தலைவர் கிரிஷாந்த மாரபே தெரிவித்தார்.

 30 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ள அதிர்ஷ்ட இலாபச்சீட்டின் விலையை 20 ரூபாயாகக் குறைக்குமாறு வலியுறுத்தினோம். இதுதொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினோம். எனினும், எமது கோரிக்கை ஏற்றுக்கொள்வதற்கு, ஆகக்குறைந்தது அக்கோரிக்கையை பரிசீலனைக்கு உட்படுத்துவதற்கு தலைவி இணங்கவில்லை.   

ஆகையால், அதிர்ஷ்ட இலாபச் சீட்டுகளைக் கொள்வனவு செய்து விற்பனை செய்வதிலிருந்து முழுமையாக விலகி நிற்பதற்கு தீர்மானித்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.   

அதிர்ஷ்ட இலாபச்சீட்டின் விலை, 20 ரூபாயிலிருந்து 30 ரூபாய் வரை, 10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டமையால், அதிர்ஷ்ட இலாபச்சீட்டின் விற்பனை 40 சதவீதத்தினால் குறைந்துள்ளது என்று, அகில இலங்கை அதிரஷ்ட இலாபச்சீட்டு விற்பனைப் பிரதிநிதிகளின் சங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .