2026 மே 07, வியாழக்கிழமை

அனுர அணியின் முக்கிய புள்ளி இராஜினாமா

Editorial   / 2026 மே 07 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

குருநாகல் மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தியைப் (NPP) பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திர, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். மாநகர சபைக்குள் நிலவும் ஊழல், நிர்வாகத் தோல்விகள் மற்றும் முறையற்ற ஆட்சி நிர்வாகம் குறித்த விரக்தியினால் தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இராஜினாமா செய்தியை உறுதிப்படுத்திய குருநாகல் மேயர் ஆனந்த சஹபந்து, இதற்கான உத்தியோகபூர்வ கடிதம் நேற்றைய தினம் கிடைக்கப்பெற்றதாகத் தெரிவித்தார். பிரேமச்சந்திர தனது தேர்தல் பிரிவான கன்கொட பிரிவில் (பிரிவு இலக்கம்: 01) அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றவர் என்பதோடு, மாநகர சபைக்குள் ஒரு முக்கிய அரசியல் நபராகவும் கருதப்பட்டார்.

தனது இராஜினாமா கடிதத்தில், மாநகர சபையின் செயற்பாடுகள் குறித்து அவர் பல கவலைகளைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, நகர எல்லைக்குள் அனுமதியற்ற வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோதக் கட்டுமானங்கள் எவ்விதத் தடையுமின்றித் தொடர்வதாகவும், அவற்றுக்கு எதிராக முறையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், எரிபொருள் பயன்பாட்டில் நிலவும் முறைகேடுகள் மற்றும் அனுமதியற்ற மேலதிக நேரக் கொடுப்பனவுகள்  வழங்கப்படுவது குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .