Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 24 , பி.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
எதிர்காலத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தி, இன, மத பேதமற்ற தேசிய சமூகம் ஒன்றை உருவாக்கி, இந்த நாட்டை சுவிசேஷம், சுபிட்சம் உள்ள தேசியமாக அனைவரும் கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தின், அதிவேக நெடுஞ்சாலையில் காபர்ட் வீதி அபிவிருத்திக்கான அங்குரார்ப்பண வைபவம் இன்று (24) மூதூர் திரி டி சந்தியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தரையாற்றிய பிரதமர், 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் மறைந்த இராஜாங்க அமைச்சர் எம்.ஈ.எச். மகருப் உடன் நான் இந்தப் பிரதேசத்துக்கு கடல் வழியாக வந்து, வெறும் மணல் வீதியிலே பயணம் செய்தேன். ஆனால், இன்று தரைவழியாக வந்து, ஐ ரோட் கார்பட் வீதிக்கான அபிவிருத்தி வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.
“இவ்வருட இறுதிக்குள் பலாலி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கான விசேட விமான சேவையை ஆரம்பிக்க உள்ளோம். இதற்காக இப்போது அதன் அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
“அதேபோன்று, உல்லாசப் பயணத்துறை விருத்தி செய்வதற்காக, மட்டக்களப்பு விமான நிலையத்தையும் அபிவிருத்தி செய்வதற்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம்.
நல்லாட்சி அரசாங்கம் இந்த நாட்டை பொறுப்பேற்றபோது கடன் வழங்குவதற்கு கூட எந்த ஒரு நாடும் முன்வரவில்லை. ஆனால், கடந்த மூன்று வருட காலத்துக்கு நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு எங்களிடம் போதுமான நிதியை வரவழைத்துக் கொண்டோம்.
21க்கு பிறகு நாடு அழிந்து விடும் என்று கற்பனை கதை ஒன்றை பொது எதிரணியினர் கட்டவிழ்த்து விட்டிருந்தனர். பாடசாலைக்கு மாணவருக்கு செல்ல வேண்டாம் என்றும் முஸ்லிம் கடைகளில் பொருள்கள் வாங்க வேண்டாம் என்றும் கூறி முஸ்லிம்களின் கடைகளை எரித்தார்கள். ஆனால் குறுகிய காலத்தில், இதற்கு எதிராக வெற்றி கண்டோம் எனவும் கூறினார்.
கடந்த முப்பது வருட கால யுத்தத்தில் யாழ்ப்பாணத்தில் ஒரு குண்டு வெடித்தால் இரண்டு, மூன்று வருடங்களுக்கு உல்லாசப் பயணிகளின் வருகை வீழ்ச்சியடையும். ஆனால் இந்த நிலைமையை மாற்றியமைத்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
3 hours ago
6 hours ago