2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

அரிசியா; 1977க்கு அழைக்கவும்

Niroshini   / 2017 பெப்ரவரி 13 , மு.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படுத்தியிருந்தாலோ அல்லது கூடுதல் விலைக்கு அரிசியை விற்பனை செய்தாலோ, அவ்வாறான வர்த்தகர்கள் தொடர்பில், 1977 என்ற இலக்கத்துக்கு அழைத்து அறிவிக்குமாறு, ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன தெரிவித்தார்.  

அதுமட்டுமன்றி, அவ்வாறான வர்த்தகர்கள் தொடர்பிலான தகவல்கள், நுகர்வோர் அதிகார சபைக்கு அறிவித்து, முறையிடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இரத்தினபுரியில், நேற்று (12) இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.   நுகர்வோர் அதிகார சபையில் முறையிடுவதற்கோ அல்லது தகவல்களை பெற்றுகொள்வதற்கோ 1977 என்ற உடனடி அழைப்பு இலக்கத்தை பயன்படுத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X