2025 ஜூன் 28, சனிக்கிழமை

ஆட்சேபனை மனு மீதான தீர்ப்பு ஒக்டோபர் 9 ஆம் திகதி

Editorial   / 2019 செப்டெம்பர் 20 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனு மீதான தீர்ப்பு ஒக்டோபர் 9 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராச்சி இந்த உத்தரவை இன்று (20) பிறப்பித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தகவல்கள் அறிந்தும் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்காமைக் குறித்து இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

 இதற்கு எதிர்ப்பு வெளியிட்டு  சட்ட மா அதிபரால் குறித்த ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .