2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

ஆணின் சடலம் ஆற்றிலிருந்து மீட்பு

Kanagaraj   / 2016 ஓகஸ்ட் 29 , மு.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு. இராமசந்திரன்,இலங்கா காமினி,எஸ்.கணேசன்

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெரேசியா தோட்ட கெசல்கமுவ ஓயா ஆற்றுப்பகுதியிலிருந்து அதே தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய நடராஜன் விக்னேஸ்வரன் என்பவர், இன்று திங்கட்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

சட்டவிரோதமாக மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த போதே, அவர் மரணமாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

வீட்டிலிருந்து கீரை ஆய்வதற்காக ஞாயிற்றுக்கிழமை மாலை சென்ற அவர், இரவாகியும் வீடு திரும்பவில்லை இதனையடுத்து, உறவினர்கள் அத்தோட்ட மக்களுடன் தேடியுள்ளனர்.

இந்நிலையில், கெசல்கமுவ ஓயா ஆற்றுப்பகுதியில் அவர், சடலமாக கிடப்பதை கண்ட பொதுமக்கள் பொகவந்தலாவை பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், மரண விசாரணைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7