2025 ஜூலை 26, சனிக்கிழமை

ஆயுத பூஜையில் பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை

Editorial   / 2022 ஒக்டோபர் 04 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆயுதபூஜையை முன்னிட்டு பொதுமக்கள் கடைகள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்களை சார்ந்தவர்கள் பூசணிக்காயை நடுவீதியில் உடைத்து கொண்டாடி வருவது வழக்கமாக உள்ளது. அவ்வாறு நடுவீதியில் பூசணிக்காயை உடைத்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது இங்கல்ல, இந்தியாவிலேயே இவ்வாறான அதிரடி அறிவிப்பு வெளியானது.   புதுச்சேரி போக்குவரத்து பொலிஸ் அதிகாரியே இவ்வாறான அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

நடு வீதியில்  உடைக்கப்படும் பூசணிக்காய்களால் வாகன சாரதிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். சில நேரங்களில் உயிரிழப்பும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

எனவே, வீதியின் நடுவே பூசணிக்காய் உடைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வீதியில் டைக்கப்படும் பூசணிக்காயால் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X