2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஆர்ப்பாட்டக்காரர்கள் 90 நாட்களுக்கு தடுத்துவைப்பு

R. Yasiharan   / 2022 ஓகஸ்ட் 20 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹஷந்த ஜவந்த குணதிலக்க ஆகியோரை 90 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

அவர்களை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பாதுகாப்பு அமைச்சகம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளதாக பொலிஸார்  நீதிமன்றில் தெரிவித்தனர்.

இந்தநிலையில் கொழும்பு யூனியன் பிளேஸில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை அடுத்து கைது செய்யப்பட்ட பதினாறு பேருக்கு கொழும்பு மேலதிக நீதவான் பிணை வழங்கியுள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .