2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இரணவில கரையோரத்திலிருந்து சிறுமியின் சடலம் மீட்பு

R.Maheshwary   / 2021 ஒக்டோபர் 21 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூட் சமந்த

சில தினங்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து காணாமல் போயிருந்த இரண்டரை வயது சிறுமியொருவர், சிலாபம்- இரணவில கடற்கரையிலிருந்து இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு- துங்கால்ப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த  சிறுமி, 18ஆம் திகதி மாலை 5 மணியளவில் வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளதாக, அவரது பெற்றோர், துங்கால்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனையடுத்து சிறுமியைத் தேடும் நடவடிக்கையில் இரகசியப் பொலிஸாரும் ஈடுபட்ட நிலையில், சிறுமி கண்டுபிடிக்கப்படவில்லை.

அச்சிறுமி காணாமல் போன போது, வெள்ளை நிற டீசேர்டும் கட்டை காற்சட்டையும் அணிந்திருந்த நிலையில், இன்று சடலமாக மீட்கப்பட்ட சடலத்தில் வெள்ளை நிற டீசேட் காணப்பட்ட போதும் அவரது உடலில் காற்சட்டையோ உள்ளாடையோ காணப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் சடலம் அடையாளம் காணப்பட முடியாத வகையில் உள்ளதுடன், உடலில் சில பகுதிகளும் காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .