2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

இரத்த மாதிரிகள் இந்தியாவுக்கு அனுப்பி வைப்பு

J.A. George   / 2021 பெப்ரவரி 13 , பி.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவர் அங்கொட லொக்காவின் மரணத்தை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக அவரது உறவினர்கள் இருவரின் இரத்த மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.

இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க, இரத்த மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததாகக் கூறப்படும் அங்கொட லொக்கா தொடர்பாக DNAபரிசோதனை நடத்துவதற்கு இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

கடந்த ஓகஸ்ட் மாதம் இந்தியாவின் கோயம்புத்தூரில் உயிரிழந்ததாகக் கூறப்படும் அங்கொட லொக்கா என்பவர் இந்தியாவில் பிரதீப் சிங் என்ற பெயரில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .