2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

இலங்கைக்கு எதிராக புதிய பிரேணை வரைவு

Freelancer   / 2022 செப்டெம்பர் 14 , பி.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடரில், இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை வரைவு, இந்த மாத இறுதியில் நிறைவேற்றப்படலாம் என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மசிடோனியா, மொண்டினீக்ரோ மற்றும் மலாவி ஆகிய நாடுகளின் இணை அனுசரணையில் இந்த பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு பல நாடுகளின் ஆதரவு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் மனித உரிமைகள் பலவீனமடைவதற்கு காரணமான பொருளாதாரக் குற்றங்களைச் செய்த அரச உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்த பிரேரணை வரைவு பரிந்துரைப்பதாகவும் தெரியவருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .