2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

உயர்தரப் பரீட்சையை பிற்போடவும்

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 27 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர்தரப் பரீட்சையை பிற்போடுமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் தடவையாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களினால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் டிசெம்பர் மாதம் உயர்தரப் பரீட்சையை நடாத்துவதன் மூலம் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

உயர்தரப் பரீட்சை நிறைவுப் பெற்று,  பெறுபேறுகள் வெளியாவதற்கு  6 மாதங்கள் ஆன நிலையில், 03 மாதங்களில் தமது பிள்ளைகள் மீண்டும் பரீட்சைக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே உயர்தரப் பரீட்சையை 02 அல்லது 3 மாதங்களுக்கு பிற்போடுமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X