2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

ஊரடங்கில் திருமணம்; மணமக்களும் சிக்கினர்

Freelancer   / 2021 ஓகஸ்ட் 30 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுரங்குளி பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறி திருமணம் நடத்திய மணமக்கள் உள்ளிட்ட  28 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று முந்தல் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்தது.

ஊரடங்கு உத்தரவின் போது, ​​மதுரங்குளிய - கனமுல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஊரடங்கு திருமணம் நடைபெறுவதாக பொது சுகாதார பரிசோதகர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் படி, பொது சுகாதார பரிசோதகர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்த போது ஒரு குழுவினர் தப்பி ஓடியுள்ளனர். அந்த இடத்தில் இருந்த 09 குடும்பங்களைச் சேர்ந்த 28 நபர்களை அந்த வீட்டில் தனிமைப்படுத்த பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X