2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான தகவல்

Editorial   / 2020 மே 01 , பி.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் மே மாதம் 11ஆம் திகதிவரை  ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பகுதிகளில் 04ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு நீக்கப்படும் ஊரடங்கு உத்தரவு இரவு 08 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படும்.

அத்துடன், அந்தப் பகுதிகளில் எதிர்வரும் 06ஆம் திகதி இரவு எட்டு மணிக்கு அமுல்படுப்படுத்தப்படும் ஊரடங்கு எதிர்வரும் 11ஆம் திகதி அதிகாலை 5 மணிவரை தொடர்ந்து அமுலில் இருக்கும்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு அமுலிலுள்ள போதிலும், மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவனங்களின் மீள் செயற்பாடுகள் எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X