2025 ஜூலை 09, புதன்கிழமை

ஐ.தே.கட்சியிலிருந்து வந்தோருக்கு ‘தேசியப் பட்டியலில் இடம்’

Editorial   / 2018 நவம்பர் 12 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரை ஆதரிப்பதற்காக, ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகிவந்து எம்முடன் இணைந்துகொண்ட வர்களுக்கு,அடுத்த பொதுத் தேர்தலில் தேசியப்பட்டியலில் இடம் வழங்குவதற்கு ஆ​​லோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின், தேசியப் பட்டியலிலேயே இடம் வழங்கப்படவுள்ளது என்றும் அதற்கான ஆலோசனைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால தெரிவித்தார்.  

“ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆனந்த அளுத்கமகே, அசோக பிரியந்த, எஸ்.பீ. நாவின்ன, அசோக பிரியந்த, வடிவேல் சுரேஷ், துனேஷ் கங்கந்த, வசந்த சேனாநாயக்க ஆகியோருக்கே இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தேசியப் பட்டியலின் ஊடாக இடம் வழங்கப்படவுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .