2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

‘ஐ.தே.கவின் கதவுகள் விரைவில் திறக்கப்படும்’

Editorial   / 2019 ஜூலை 25 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக, ஐக்கிய தேசியக் கட்சியின் கதவுகள் விரைவில் திறக்கப்படுமென்று அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாள்களில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துக்​கொள்வார்களெ என்றும் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டிலிருந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக, நாடு முகங்கொடுக்கக் கூடிய புதிய சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கான, வேலைத்திட்டங்கள், அந்த வேலைத்திட்டங்களுக்கு தேவையான தலைமைத்துவத்தை ஐக்கிய தேசியக் கட்சியில் உருவாக்குவதற்காக, கலந்துரையாடி நல்ல தீர்மானத்தை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .