2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஒற்றுமையை சிதைக்க சில சக்திகள் முயற்சி

Freelancer   / 2021 ஒக்டோபர் 02 , பி.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒருங்கிணைத்த கூட்டங்கள் இடம்பெறாமையானது சில தெளிவற்ற நிலைமைகளையும் குழப்பங்களையும் தோற்றுவித்துள்ளது என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை சிதைப்பதற்கும் சில சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின்  தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று (01) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய பொறுப்புக்களை வகிக்கும் அங்கத்தவர்கள் பொதுவாக வடக்கு கிழக்கு மாகாண மாவட்டங்களில் வசிக்கிறார்கள். 

கொரோனா வைரஸின் தாக்கம் தனியாகவும் குழுக்களாகவும் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்கு தடையாக அமைந்துள்ளது. இதன்  விளைவாக சில விடயங்கள் தொடர்பில் தெளிவற்ற நிலைமை உருவாகியுள்ளது  

தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வொன்றினை அரசியல் யாப்பினூடாக பெற்றுக்கொள்வதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் மிக பிரதானமான குறிக்கோளாகும்.  

இந்த நாட்டிலே தமது பூர்விகத்தினை கொண்டுள்ள மக்களின் இறையாண்மையானது முழு நாட்டிலும் அவர்களுக்கான ஆட்சி  அதிகாரம், அடிப்படை உரிமைகள், மற்றும் வாக்குரிமை என்பவற்றினை உள்ளடக்கும், அவர்களின் வரலாற்று ரீதியான பூர்விகம், மற்றும் இலங்கை அரசாங்கமும் தலைவர்களும் உள்நாட்டிலும் சர்வதேசத்திற்கும் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையிலும் இலங்கை அரசாங்கம் ஏற்ட்டுக்கொண்டுள்ள சர்வதேச உடன்படிக்கைகள், மற்றும் பிரமாணங்களின் அடிப்படையிலும் அமையப்பெற்றதாகும். இந்த அடிப்படை விடயம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மிக தெளிவாகவும் உறுதியாகவும் தனது நிலைப்பாட்டினை தெரிவித்துள்ளது. 

ஏனைய சில விடயங்கள் தொடர்பில், ஒருங்கிணைத்த கூட்டங்கள் இடம்பெறாமையானது சில தெளிவற்ற நிலைமைகளையும் குழப்பங்களையும் தோற்றுவித்துள்ளது. 

அதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை சிதைப்பதற்கும் சில சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. 

ஒற்றுமையை உறுதி செய்யும் முகமாக இந்த விடயங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறும்.

முழுமையான அனைத்தும் உள்ளடங்கிய ஒரு அரசியல் யாப்பினை இந்த நாடு உருவாக்க முனைவதாக கூறப்படுகின்றது. இந்த முக்கிய தருணத்தில் ஒற்றுமையை பேணுவது  அடிப்படையானதாகும். மக்கள் மத்தியில் ஒரு தெளிவு இருக்கவேண்டும் மாறாக அவர்களை குழப்பக்கூடாது.

ஒன்றுபட்ட பிளவுபடாத நாட்டிற்குள், சமத்துவம் நீதி மற்றும் சுயகௌரவம் என்பவற்றின் அடிப்படையில் ஒரு தீர்வினை எட்டும் எமது குறிக்கோளில் உறுதியாக பயணிப்பதற்கு தெளிவின்மைகளையும் குழப்பங்களையும் தவிர்த்துக் கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .